உள்நாட்டு செய்தி
கரையோர ரயில் சேவையில் தாமதம் !
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2024/03/download-58.jpg)
இன்று, நாளை மற்றும் நாளை மறுதினங்களில் கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பம்பலப்பிட்டி ரயில் நிலைய பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு ரயில் சேவையில் தாமதம் ஏற்படக்கூடும் என அதன் பிரதி பொதுமுகாமையாளர் என் ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.இதனால் கொழும்பில் இருந்து வெள்ளவத்தை வரையான ரயில் சேவை ஒரு வழி மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் என்பதால், சில சந்தர்ப்பங்களில் ரயில் சேவை இரத்து செய்யப்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.