Connect with us

உள்நாட்டு செய்தி

முன்னாள் ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசாரணை

Published

on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.குறித்த விடயம் தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(25) வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் வௌியிட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. அவர் வழங்கிய வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வழங்கிய வாக்குமூலம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் இன்று கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அவர் வழங்கிய வாக்குமூலம் மற்றும் அது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களை ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டது யார் என்பது தொடர்பில் தான் அறிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 22 ஆம் திகதி தெரிவித்திருந்தார். அவரது கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.அதற்கமைய நேற்று(25) முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 03.50 வரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *