Connect with us

உள்நாட்டு செய்தி

விபத்தில் 3 பிள்ளைகளின் தாய் பலி : மூவர் காயம் !

Published

on

புத்தளம் – கொட்டுக்கச்சிய , கல்லகுளம் பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.லொறியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக 3 பிள்ளைகளுடன் வருகைதந்த குறித்த பெண் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்தில் 43 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த  பெண்ணின் இரு பிள்ளைகள் மற்றும் லொறியின் சாரதி ஆகியோர்  படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *