உள்நாட்டு செய்தி
இணையவழி ஆசன ஒதுக்கீடு : ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு !

இணையவழி ஊடாக ரயில்களில் ஆசன ஒதுக்கீடு செய்யும் முறைமையில் தொழில்நுட்ப சிக்கல்கள் காணப்படுமாயின் அவை அடுத்த சில நாட்களில் நிவர்த்தி செய்யப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆசனங்களை ஒதுக்கீடு முறைமையில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப சிக்கல்களை நீக்கி தொடர்ந்தும் அந்த முறைமை முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் எம்.ஜி.இந்திபொல தெரிவித்துள்ளார்.
இந்த முறைமை நாடளாவிய ரீதியில் முதன்முறையாக அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் என்பதனால் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இணையத்தின் ஊடாக ரயிலில் ஆசனத்தை முன்பதிவு செய்திருந்தாலும் சில பயணிகளுக்கான ஆசனம் அவர்கள் ரயில் நிலையத்திற்கு பிரவேசித்த பின்னரும் ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது