Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதி தேர்தளுக்கான பிரசாரத்தை ஜனாதிபதி இன்று ஆரம்பிக்கவுள்ளார்

Published

on

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை இன்று குளியாப்பிட்டியவில் இருந்து ஆரம்பிக்கவுள்ளார். “சபேவா” (யதார்த்தம்) எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வு குளியாப்பிட்டி மாநகர சபை மைதானத்தில் இன்று. பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கட்சி சார்பற்ற வேட்பாளராக முன்வந்துள்ள ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு பல்வேறு அரசியல் அமைப்புகளினதும் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கியப்பட்ட ஆதரவை வெளிப்படுத்தும் முயற்சியில், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கட்சி சார்பற்ற முயற்சிக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்கால பொது பேரணிகளுக்கான திட்டங்களை காரியவசம் அறிவித்தார்.

இன்றைய பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர்கள் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார, மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க. ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *