Connect with us

உள்நாட்டு செய்தி

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் சுகாதார திறன்களை மேம்படுத்த நடவடிக்கை

Published

on

 

1170 மில்லியன் யென் ஜப்பானிய நிதியுதவியின் கீழ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் சுகாதாரத் திறனை மேம்படுத்தும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் முக்கியமாக சர்வதேச சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியிருப்பதால், இதற்கு நாட்டிற்குள் நுழையும் இடங்களை சீராகச் செயற்படுத்துவது, பயணிகளிடையே நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் சர்வதேச சுகாதார விதிமுறைகளுக்கு இணங்க எல்லை தாண்டிய நுழைவுப் புள்ளிகளை ஏற்பாடு செய்வது அவசியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நுழையும் இடங்களில் எல்லை தொடர்பான சுகாதாரத் தயார்நிலையை மேலும் வலுப்படுத்தவும், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தவும், அனைத்துப் பயணிகள், ஊழியர்கள் மற்றும் ஊழியர்களின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்காகவும் ஜப்பான் அரசாங்கம் 1170 மில்லியன் யென்களை இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மூலம் வழங்கியுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு துறைமுகம் மற்றும் மாலைதீவு சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் உள்ள வசதிகளை சர்வதேச நடைமுறைகள், பரிந்துரைகள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு, குடிவரவுத் திணைக்களம், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் தொடர்புடைய திட்டத்தை நடைமுறைப்படுத்த துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *