வானிலை
இரத்தினபுரி வெப்பமாக மாறுகிறது!

காற்றின் ஓட்டம் குறைந்ததன் காரணமாக சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டம் மற்றும் மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரியில் 36c டிகிரியாகவும், கண்டியில் 30c மற்றும் நுவரெலியாவில் 21c டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
காற்றின் ஓட்டம் குறைந்ததால் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது வழமையான நிகழ்வு எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை நிபுணர் தெரிவித்துள்ளார்.