Connect with us

உள்நாட்டு செய்தி

கஹவத்தை இரட்டை கொலை சம்பவம்: குற்றவாளிக்கு மரண தண்டனை உத்தரவு

Published

on

இரத்தினபுரி – கஹவத்தை கொடக்கதென்ன பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு மரண நேற்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்றைய தினம் இரத்தினபுரி மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொட்டகெதன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் தாய் மற்றும் மகள் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *