Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னாரில் 13 வயது சிறுமி சடலமாக மீட்பு…!

Published

on

      

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எருக்கலம்பிட்டி 1ஆம் வட்டார பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம், இன்று (12.02.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சிறுமி காணாமல் போன நிலையில் சிறுமியின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

வவுனியாவில் உள்ள சிறுவர் நிலையம் ஒன்றுக்கு குறித்த சிறுமி சென்றிருந்த நிவையில் பின் நேற்றையதினம் (11.02.2024) அங்கிருந்து அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்து சிறுமி கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *