Connect with us

உள்நாட்டு செய்தி

காணிகளை வழங்கும் அரச நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பில் கயந்த கருணாதிலக விளக்கம்

Published

on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தமக்குக் கிடைத்த உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் வறியவர்களுக்கு காணிகளை வழங்கும் அரச நிகழ்வில் கலந்து கொண்டதாக ஐக்கிய பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

“எனக்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நான் காணிகளுக்குப் பொறுப்பான முன்னாள் அமைச்சர் என்பதனால் இவ்விழாவில் பங்கேற்பது சரியானது என நினைத்தேன். நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஏழைகளுக்கு காணிகளை பகிர்ந்தளிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தவன் நான். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட தரப்பினர் நீதிமன்றத்திற்குச் சென்று எங்கள் திட்டத்தை நிறுத்தினர். நிகழ்ச்சியின் முன்னோடியாக நான் விழாவிற்கு அழைக்கப்பட்டேன்” என பாராளுமன்ற உறுப்பினர் கருணாதிலக தெரிவித்தார்.

“ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இருவரும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு முன்னோடியாக நான் இருந்தேன் என விழாவின் போது தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *