உள்நாட்டு செய்தி
அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை – விவசாய அமைச்சர்
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2021/09/rice-price-2.jpg)
தேவையான அளவு அரிசியை நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில், நாட்டிற்குள் அதிகளவு அரிசியை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில், நாட்டின் அரிசி தேவையில் மூன்றில் ஒரு பங்கு இறக்குமதி செய்யப்பட்டது.
இந்தநிலையில், நாட்டுக்குத் தேவையான அரிசியின் அளவு தற்போது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.