Connect with us

முக்கிய செய்தி

மேலும் பல தபால் நிலையங்களில் இரவில் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி விரைவில்

Published

on

ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு வசதியாக இலங்கை தபால் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

தற்போது மேல்மாகாணத்தில் இரவு நேர பணியுடன் கூடிய தபால் நிலையங்களில் போக்குவரத்து அபராதங்களை செலுத்த முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல்மாகாணத்தில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் ஏனைய மாகாணங்களில் இரவில் இயங்கும் தபால் நிலையங்களில் அபராதம் செலுத்துவதற்கு வசதியாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஜனவரி மாத இறுதிக்குள் உரிய வசதிகள் செய்து தரப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *