Connect with us

முக்கிய செய்தி

ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் ஜனவரியில் அமுல்படுத்தப்படும்

Published

on

 

மூன்று மாத ஆலோசனை செயல்முறையை நடத்த வேண்டும் என சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தினாலும் ஜனவரி 23 ஆம் திகதி ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒன்லைன் பாதுகாப்பிற்காக இதுபோன்ற சட்டமூலத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், சிவில் சமூக இயக்கங்கள் சட்டமூலத்தில் இணைக்கப்பட வேண்டிய தொழில்துறை பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற மூன்று மாத ஆலோசனை செயல்முறையை நாடியது.

சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்க சிங்கப்பூர் சென்றது.

இந்த சட்டமூலம் சிங்கப்பூரின் ஒன்லைன் பொய்மைகள் மற்றும் கையாளுதல் சட்டத்திலிருந்து (POFMA) பரவலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற வாரத்தில் இந்த சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படும் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் அஷு மாரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்துறை பங்குதாரர்களின் உள்ளீடுகளை இந்த சட்டமூலத்தின் இறுதிச் சட்டத்தில் இணைப்பதற்கு அமைச்சு காத்திருக்கிறது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *