உள்நாட்டு செய்தி
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு பல கைதிகளுக்கு நாளை பொது மன்னிப்பு

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், நத்தார் பண்டிகைக்காக அதிகளவான கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த கைதிகளுக்கு நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று கூறிய அவர் , நாளை (25) நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் பொதுமன்னிப்புக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.