Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் தொற்றாளர்களும், மரணங்களும் உயர்வு

Published

on

நேற்றைய தினம் (16) நாட்டில் 756 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக கொவிட் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 77,184 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, பேலியகொட, மினுவாங்hகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 73,157 ஆக உயர்வடைந்துள்ளது.

6,346 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று அறிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்
• பானந்துறை பகுதியை சேர்ந்த 74 வயதான ஆண்
• விலஓயா பகுதியை சேர்ந்த 40 வயதான ஆண்
• பிலியாந்தலை பகுதியில் வசித்த 48 வயதான ஆண்
• கொச்சிக்கடை பகுதியில் வசித்த 77 வயதான ஆண்
• அம்பலாங்கொட பகுதியில் வசித்த 65 வயதான ஆண்
• நயினாமடம் பகுதியில் வசித்த 62 வயதான ஆண்