Connect with us

உள்நாட்டு செய்தி

2024 இலங்கைக்கு பாரிய பொருளாதார பின்னடைவு ஏற்படும்

Published

on

 

2024 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் நாட்டுக்கு படு பயங்கரமான ஆண்டாக அமையப்போகின்றது. எனவே, மக்கள் ஆணைபெற்ற அரசு ஆட்சிபீடமேற உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2023 ஆம் ஆண்டைவிடவும் 2024 ஆம் ஆண்டு படு பயங்கரமான ஆண்டாக அமையப்போகின்றது. பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைப்போகும் ஆண்டாக அமையப்போகின்றது.

மூன்று வேளை உணவு உட்கொண்ட மக்கள் தற்போது இருவேளைகள்தான் உண்கின்றனர். இந்நிலைமையும் அடுத்த ஆண்டு இல்லாமல்போகக்கூடும்.

எனவே, அரசு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் ஆணையுடன் ஆட்சியொன்றை ஏற்படுத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை மீட்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் என்ன நடக்கின்றது? பொருட்களின் விலைகள் எல்லாம் எகிறிவிட்டன.

மக்களால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கள்வர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். விலைமனு கோர்களில் கொள்ளைகள் இடம்பெறுகின்றன. எனவே, இந்நாட்டை மேலும் நாசமாக்காமல் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம்” என தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *