Connect with us

முக்கிய செய்தி

போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றுக்கொடுத்த 6 பேர் கைது

Published

on

  

 

போலி ஆவணங்கள் மூலம் இலங்கையர்கள் 28 பேருக்கு கடவுச்சீட்டு பெற்றுக்கொடுத்த தபால் ஊழியர் உள்ளிட்ட 6 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் இலங்கையர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி இரவு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில், கடவுச்சீட்டுகள் கைமாற்றப்பட்டபோது, சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்யவுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களினால் தமிழகத்தில் வசிக்கும் 28 இலங்கையர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *