Connect with us

உள்நாட்டு செய்தி

காதலனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை

Published

on

பதுளையைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது 20 வயது காதலனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தனது 70 வயதான பாட்டியுடன் வசித்து வந்ததாகவும், அவரது தந்தை பிறப்பதற்கு முன்பே அவரைக் கைவிட்டதாகவும், அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது.

சந்தேக நபர் பல வாரங்களுக்கு முன்னர் பதுளை காத்தாடி மலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண் கல்வி வகுப்பிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீடு திரும்பியதும், பாதிக்கப்பட்ட பெண் தனது தோழி ஒருத்திக்கு தான் துஷ்பிரயோகம் செய்ததை SMS. மூலம் தெரிவித்துள்ளார்,

மேலும் தனது பாட்டி பயன்படுத்திய மருந்துகளை அதிகப்படியாக
உட்கொண்டுள்ளார்.

அதனால் பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் 20 வயதுடைய சந்தேகநபரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *