Connect with us

உள்நாட்டு செய்தி

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

Published

on

அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் 2024ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை கற்பித்து முடிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இம்மாதம் பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு பெப்ரவரி 2 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் புதிய ஆண்டுக்கான பாடசாலை தவணை பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை, ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *