Connect with us

உள்நாட்டு செய்தி

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Published

on

      

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் பொலிஸாரினால் விதிக்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக மேல் மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மக்களின் வசதிக்காக தபால் திணைக்களமும், பொலிஸாரும் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பனிவீதி, பத்தரமுல்ல, கல்கிசை, நுகேகொடை, சீதாவாக்கபுர ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்கள் 24 மணிநேரமும் இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *