Connect with us

Sports

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகும் பிரபல கிரிக்கெட் வீரர்  

Published

on

 

17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் இந்த கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதாக காணப்படுகின்றது.
17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் விலகியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தோன் ரோயல்ஸ் அணிக்காக ஜோ ரூட் விளையாடி வந்தார்.
ஜோ ரூட்டின் இந்த தீர்மானத்தினை ஏற்றுக்கொள்வதாக ராஜஸ்தோன் ரோயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *