Connect with us

உள்நாட்டு செய்தி

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற நபர் கைது.!

Published

on

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரை, குடிவரவு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (31) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், தனது ஐந்து வயது மகன் மற்றும் அவரது மனைவி என குறிப்பிடப்பட்ட காங்கேசன்துறையைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவருடன்,இத்தாலி செல்வதற்காக நேற்றையதினம் மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 1.45 மணிக்கு அவர்கள் விமானத்தில் பயணிக்கவிருந்தனர்.அவர்கள் குடியகல்வு சாளரத்தில் தமது பயண ஆவணங்களை வழங்கியபோது, அவர்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழத் தொடங்கின. அவர்கள் மூவரும் எல்லை ஆய்வுப பிரிவிடம் பரிந்துரைக்கப்பட்டனர்.அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனைகள் மற்றும் முதற்கட்ட விசாரணைகளின்போது, இந்த சிறு குழந்தை, சந்தேக நபருடையது எனினும், இந்த பெண் அவர்களது குடும்பத்தின் மனைவியோ அல்லது தாயோ அல்ல என்றும், வேறு பெண் என்றும் தெரிய வந்தது.இந்த நபர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்தபோது இத்தாலியில் உள்ள தனது மனைவியின் கடவுச் சீட்டை கொண்டு வந்து,கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு முத்திரையை போலியாக தயாரித்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அந்த கடவுச்சீட்டை பயன்படுத்தி வேறொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த அவர், இதற்கு முன்னர் மனைவியின் கடவுச் சீட்டை பயன்படுத்தி மேலும் ஒரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.அதன்படி, குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினரால் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *