Connect with us

உள்நாட்டு செய்தி

புதிய பொலிஸ் மா அதிபரை உடனடியாக நியமிக்க வேண்டும்: மொட்டுக் கட்சி

Published

on

புதிய பொலிஸ் மா அதிபரை விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று (25.10.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கட்சியின் சார்பில் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் மா அதிபர் பதவி என்பது முக்கியத்துவம் மிக்கது. எனவே, அரசமைப்புப் பேரவைக்கு தமது யோசனையை முன்வைத்து, புதிய பொலிஸ்மா அதிபரை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய பொலிஸ் மா அதிபரை உடனடியாக நியமிக்க வேண்டும்: மொட்டுக் கட்சி வலியறுத்து | Appoint New Inspector General Police Slpp

தேர்தலை ஒத்திவைப்பது போல் பொலிஸ்மா அதிபர் நியமனத்தையும் ஒத்திவைத்துக் கொண்டிருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ரோஹித அபேகுணவர்தன முன்வைத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *