Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பில் முற்றாக தீ பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

Published

on

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக எரிந்துள்ளது.இரண்டு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளே இன்று (21.10.2023) பிற்பகல் 2.30 மணியளவில்  தீப்பற்றியுள்ளது.

இந்நிலையில், அருகில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிவதைக் கண்டு கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தீயணைப்பு பிரிவின் செயற்பாடுஇதன் பின்னர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.மோட்டார் சைக்கிளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்ததாக அதில் பயணித்த இரு இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *