Connect with us

முக்கிய செய்தி

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 27 இந்திய மீனவர்கள் கைது

Published

on

காங்கேசன்துறை மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் நேற்றிரவு சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 27 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 3 படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மன்னார் கடற்பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 2 படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *