Connect with us

உள்நாட்டு செய்தி

கடற்படை வீரரிடமிருந்து 3 இலட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளை

Published

on

அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து தன்னிடமிருந்து 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக,கடற்படை வீரர் ஒருவர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.பாதிக்கப்பட்டவர் அநுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு நின்றிருந்தபோது இரண்டு நபர்கள் அவருடன் உரையாடி நெருக்கமாக பழகிய பின்னர் மதுபானத்தை அவருக்கு அருந்தக் கொடுத்துள்ளனர்.அதனையடுத்து, அவர் போதையில் மயங்கிய நிலையில், குறித்த இரண்டு நபர்களும்,அவரது 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கமாலை, கையடக்கத் தொலைபேசி மற்றும் 2000 ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *