Connect with us

Sports

வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான் அணி.!

Published

on

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 8ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 122 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 108 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.குசல் மெண்டிஸ் 65 பந்துகளில் சதத்தை பூர்த்திசெய்தார்.இந்தநிலையில் இன்றைய போட்டியில் உபாதைக்கு உள்ளான குசல் மெண்டிஸ் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக துஷான் ஹேமந்த அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.அத்துடன் சதீர சமரவிக்ரம விக்கட் கப்பாளராக செயற்படுகிறார்.இந்தநிலையில் 345 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி,48.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 345 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *