Connect with us

உள்நாட்டு செய்தி

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி !

Published

on

கொழும்பு – குருணாகல் வீதியின் புஹுரிய சந்தியில் டிப்பர் ரக வாகனம் மோதுண்டதில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனங்களை நிறுத்தி நேற்றிரவு சோதனையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது, கந்தளாயில் இருந்து கடுவளை நோக்கி மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதுண்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ்உத்தியோகத்தர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இந்தநிலையில், வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.அண்மையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் கார் ஒன்று மோதியதில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *