Connect with us

வானிலை

சீரற்ற காலநிலையால் 53,000க்கும் அதிகமானோர் பாதிப்பு…!

Published

on

நாடு முழுவதும் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலையால் 12 மாவட்டங்களில் 53,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 13,027 குடும்பங்களைச் சேர்ந்த 53,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வெள்ளத்தினால் 39,191 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா மாவட்டம் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய நிலவர அறிக்கையின்படி,சீரற்ற காலநிலையால் 725 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட சுமார் 381 குடும்பங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *