Connect with us

முக்கிய செய்தி

மரத்திலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு: மட்டக்களப்பில் சம்பவம்

Published

on

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மரத்தை வெட்டிக் கொண்டிருந்தவர் தவறுதலாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்றைதினம் (02.10.2023) இடம்பெற்றுள்ளது. 35 வயதுடைய தர்மலிங்கம் லக்ஸ்மன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது குறித்த நபர் மரத்தில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலத்தை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைஇதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சியை விட குறைவான விலையில் எரிபொருளை வழங்கும் சினோபெக்இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *