Connect with us

உள்நாட்டு செய்தி

மட்டக்களப்பில் போதனா வைத்தியசாலையில் 17 வயது யுவதி திடீரென உயிரிழப்பு

Published

on

மட்டக்களப்பில் 17 வயதான யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு யுவதியின் தாய் கருத்து தெரிவிக்கையில், “தோல் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே எனது மகள் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்ப் பிரிவில் மருந்துகளை பெற்று அருந்தி வந்த நிலையிலேயே எனது மகளுக்கு திடீரென காய்ச்சலும், வாந்தி நிலைமையும் ஏற்பட்டது. இதனையடுத்தே மகள் உயிரிழந்து விட்டார்” என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பில் போதனா வைத்தியசாலையில் 17 வயது யுவதி திடீரென உயிரிழப்பு (Photos) | 17 Year Girl Death In Batticaloa

எனினும் இந்த விடயம் தொடர்பில் உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உறுதியான தகவல்களை வெளியிடமுடியும் என வைத்தியசாலை தரப்பு தெரிவிப்பதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த யுவதியின் உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பான மேலதிக தகவல்களை அறியும் முயற்சியை எமது செய்திப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

எனவே பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர் சம்பவம் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *