உள்நாட்டு செய்தி
மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை காண்பித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2020/11/prism-.jpg)
இரத்தினபுரி – ஓபநாயக்க பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஓபநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் தெயியந்தர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த நபரை இன்று நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.