Connect with us

முக்கிய செய்தி

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் ஐ.நா கோரிக்கை

Published

on

பொறுப்புக்கூறல் தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூறல் மிகவும் இன்றியமையாதது எனவும் தெரிவித்துள்ளது.

போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் வேதனையுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் ஐ.நா கோரிக்கை | Accountability Central To Sri Lankas

போர் குற்றச்செயல்கள் அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலான பொறுப்புகூறல் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முன்னோக்கி நகர வேண்டுமாயின் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும்,பொறுப்புகூறல் விவகாரத்தில் இலங்கை தொடர்ந்தும் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறிதல் மட்டும் போதுமானதல்ல எனவும் பொறுப்புகூறல் மற்றும் மாற்றங்களை நடைமுறைபடுத்தக்கூடிய அரசியல் விருப்பம் என்பனவும் மிகவும் அத்தியாவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் சர்வதேச உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஏற்கனவே அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் ஐ.நா கோரிக்கை | Accountability Central To Sri Lankas

இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்கு சர்வதேச சமூகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அதேவேளை, குற்றசெயல்களுக்கு பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை, நல்லாட்சி ஆகிய விடயங்களில் அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதனை இலங்கைக்கு வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நிறுவன ரீதியான மாற்றங்களை, மறுசீரமைப்புகளை செய்து குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூறல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *