Connect with us

உள்நாட்டு செய்தி

யாழில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு: அரச அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை

Published

on

யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியும் இதுவரை எழுத்து மூலமான உரிய பதில் கிடைக்கவில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.யாழ். நல்லூரில் ஒரு கப் பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவது தொடர்பில் நேற்றையதினம் (22.08.2023) அரசாங்க அதிபரைத் தொடர்பு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சிற்றுண்டி உரிமையாளர்கள் வர்த்தக சங்கத்தினர் உணவகத்தினர் மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்கள் சார்ந்தவர்களுடனா உயர் மட்ட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.உணவு பண்டங்களின் விலைகுறித்த கலந்துரையாடலில் உணவு பண்டங்களின் மாறுபட்ட விலைகள் தொடர்பில் பேசப்பட்ட நிலையில், உணவக உரிமையாளர்கள் தமக்குள்ளே ஒரு சங்கமாக இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி விலைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்திற்கு அறியத் தருமாறு கூறினேன்.

அதற்கான கால எல்லையும் முடிவடைந்த நிலையில் பதில் தரவில்லை.நல்லூர் சம்பவம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரைச் சம்பவம் தொடர்பில் நேரில் சென்று பார்வையிடுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.ஆகவே உணவகங்களில் விற்கப்படும் உணவு பண்டங்களின் விலை தொடர்பில் உரிய தரப்பினர்கள் அறிவுறுத்தல்களைச் செவி சாய்க்காவிட்டால் மேலதிக நடவடிக்கைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *