Connect with us

உள்நாட்டு செய்தி

முல்லைத்தீவில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்ற இளைஞனுக்கு கைது

Published

on

முல்லைத்தீவில் திருமணம் செய்வதாகக் கூறி 15 வயது சிறுமியை அழைத்து சென்ற இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசுவமடுவை சேர்ந்த 15 வயது சிறுமியைக் காணவில்லை என கடந்த மாதம் பெற்றோரால் விசுவ மடு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்று (12.08.2023) முல்லைத்தீவு – கள்ளப்பாட்டில் வைத்து கள்ளப்பாட்டினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனையும் குறித்த சிறுமியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனைத் தடுப்பு காவலில் வைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதம் குறித்த இளைஞன் சிறுமியைத் திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *