Connect with us

முக்கிய செய்தி

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு: விளக்கமறியல் உத்தரவு

Published

on

   பதினொரு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 62 வயதான பௌத்த பிக்கு ஒருவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மொரட்டுவையில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு, சிறுமியின் தந்தையின் முறைப்பாட்டிற்கு அமைய கல்கிசை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.62 வயதான பிக்கு துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாயுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தனது மகளுடன் கல்கிசையில் உள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியிலுள்ள வீடொன்றுக்கு வருமாறு குறித்த பெண்ணிடம் பிக்கு கூறியுள்ளதுடன், சிறுமியின் தாயாருக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்ட நிலையில், அப்போது சந்தேகத்திற்குரிய பிக்கு மகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.இந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது தாயார் மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.இருப்பினும், அவர் தனது தந்தை மற்றும் பாட்டியிடம் இந்த விடயத்தை தெரிவித்தார், பின்னர் அவர் பொலிஸாரிடம் புகார் செய்தார்.சிறுமியின் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *