Connect with us

உள்நாட்டு செய்தி

நிட்டம்புவ மற்றும் வெலிசர வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் ஆரம்பம்

Published

on

 அடுத்த மூன்று ஆண்டுகளில் நடுத்தர வர்க்கத்தினருக்காக 866 வீடுகள் கொண்ட ஐந்து வீட்டுத் திட்டங்கள்… திட்ட மதிப்பு 25 பில்லியன் ரூபாய்… நிட்டம்புவ மற்றும் வெலிசர வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் ஆரம்பம்…– அமைச்சர் பிரசன்ன ரணதுங்கநடுத்தர வர்க்கத்தினருக்காக அடுத்த மூன்று வருடங்களில் 25 பில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.866 வீடுகளைக் கொண்ட இந்த வீடமைப்புத் திட்டம் வெலிசர, நிட்டம்புவ, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, அதுருகிரிய மற்றும் கடுவெல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வீட்டுத்திட்டங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.இந்த ஐந்து வீடமைப்புத் திட்டங்களில் நிட்டம்புவ மற்றும் வெலிசர வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.நிட்டம்புவ வீடமைப்புத் திட்டமானது 100 மூன்று அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடுகள் மற்றும் 30 இரண்டு அறைகள் கொண்ட வீடுகளைக் கொண்டுள்ளது. மேலும் வெலிசர வீடமைப்புத் திட்டம் 408 வீடுகளைக் கொண்டுள்ளது. இது 204 இரண்டு அறை வீடுகளையும் 204 மூன்று அறை வீடுகளையும் கொண்டுள்ளது.ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள வீட்டுத் தொகுதியில் 160 வீடுகளும், அதில் 84 இரண்டு அறை வீடுகளும் 72 மூன்று அறை வீடுகளும் 4 சொகுசு வீடுகளும் உள்ளடங்குவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *