Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

Published

on

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குழாய் கட்டமைப்பில்  மேற்கொள்ளப்படவுள்ள  அத்தியவசிய திருத்தப்பணிகள்  காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளின் சில இடங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதனால், கோட்டை மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபை பகுதிகள் மற்றும் கொழும்பு 04, 05, 07 மற்றும் 08 ஆகிய இடங்கள்  இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

குறித்த நீர் விநியோகத்தடை இரவு 9.00 மணி வரை நீடிக்கும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது

இதேவேளை கொழும்பின் சில பகுதிகளில் நாளை 10 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை குறித்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொலன்னாவ நகர சபை பகுதி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர மற்றும் பண்டாரநாயக்கபுர ஆகிய பிரதேசங்களில் குறித்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவ நீரேற்று நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு  சபை தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *