Connect with us

முக்கிய செய்தி

நுவரெலியா மாவட்டத்தில்   கட்டிடங்களை    நிர்மாணிப்பது தொடர்பில்  அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்

Published

on

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு மாடிகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களை நிர்மாணிப்பதை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுமே முதலாம் ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில்  குறித்த  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுநகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகார சட்டத்திற்கு   அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு  அமைச்சரவையில் ஜனாதிபதியினால் யோசனைதிட்டம் முன்வைக்கப்பட்டிருந்ததுநுவரெலியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முறைசாரா அபிவிருத்தி பணிகள்  நுவரெலியா நகரின் சுற்றுலாத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக  ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்இந்த நிலையில் குறித்த யோசனை திட்டத்திற்கு அமைச்சரவை    அனுமதி வழங்கப்பட்டதன் ஊடாக  இந்த  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார்அமைச்சரவை தீர்மானங்களை  அறிவிக்கும் வாராந்த  ஊடகவியலாளர் சந்திப்பு  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.இன்றைய சந்திப்பில்  பங்கேற்றிருந்த  அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்தார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *