Connect with us

உள்நாட்டு செய்தி

இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்பு

Published

on

நாவுல –மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில்  விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து  நேற்றிரவு இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீர்த்தேக்கம் மற்றும் மின்நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  தம்புள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் இதன்போது  உயிரிழந்துள்ளார்.

ராணுவ சிப்பாய்கள் 10 பேர்   நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு பணியில்     ஈடுபட்டிருந்த நிலையில்  ஒருவர் காணாமல் போயிருந்தமையினால்  தேடுதல் பணிகளை முன்னெடுப்பட்டிருந்தது.

இதன்போது, குறித்த  நீர்த்தேக்கத்தின், 300 மீற்றர் ஆழத்தில் நீர் பாயும் பாலத்தின் அடிவாரத்தில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார்  மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *