Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published

on

 நாட்டில் அண்மைய நாட்களாக தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 3 மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி, குறித்த காலப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் சுமார் 355 தொழுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.அவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.மேலும், சுமார் 10 வீதமானவர்கள் சிறுவர்கள் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின்  பணிப்பாளர் வைத்தியர்  பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *