Connect with us

உள்நாட்டு செய்தி

குவைத்தில் நிர்க்கதியாகியிருந்த இலங்கையர்கள்  52 பேர் மீண்டும் நாட்டிற்கு வருகை

Published

on

தொழில் நிமித்தமாக குவைட்  சென்று நிர்க்கதியான இலங்கையர்கள்  52 நாடு திரும்பியுள்ளனர்குவைத்தில் உள்ள  இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டு நீண்ட காலமாக வீட்டுபராமரிப்பு  பணிகளில் ஈடுபட்டிருந்த 52 இலங்கையர்கள்  தற்காலிக விமான அனுமதிப்பத்திரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுஇந்த நிலையில் குறித்த  பணியாளர்கள் குவைத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமூடாக  இன்று காலை 06.5  அளவில்   கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்அனுராதபுரம், காலி, கொழும்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த  17 ஆண் ஊழியர்களும் 35 பெண் ஊழியர்களும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில்  விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடமிருந்து இவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.அத்துடன் இவ்வாறு நாடுதிரும்பியவர்களிடம் இருந்து கருத்து கோருவதற்கு  ஊடகவியலாளர்கள முயற்சித்த போதிலும்  விமான சேவை நிறுவனத்திடம்இருந்து அதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை. எனவும் தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *