Connect with us

வானிலை

ஹம்பாந்தோட்டை கடற்கரையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்

Published

on

ஹம்பாந்தோட்டை கடற்கரையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது

ஹம்பாந்தோட்டை கடற்கரையை அண்மித்த பகுதியில்  இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் நேற்று நள்ளிரவு  12.45 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலஅதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக  புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பதுளை கண்டி மாவனெல்லை ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது

எவ்வாறாயினும் , இது குறித்து பொதுமக்கள் வீண் அச்சமடைய தேவையில்லையெனவும் தெரிவித்துள்ளது

6.5 அல்லது 7 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்படும்  நிலநடுக்கங்கள் மாத்திரமே சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் சுரங்க  பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *