Connect with us

உள்நாட்டு செய்தி

நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா வரை ரயில் பாதை

Published

on

   நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்ககூடிய புதிய தொடருந்து பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.நுவரெலியா, நானுஓயா பகுதிக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இந்த தகவலை வெளியிட்டார்.நுவரெலியா நகருக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தொடருந்து சேவை தேவையாக உள்ளது.எனவே, மத்திய மாகாண ஆளுநர் காலத்தில் செயற்பட்ட நுவரெலியா – கந்தபளை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக புதிய ரயில் பாதையும் நிர்மாணிக்கப்படும்.நுவரெலியாவில் இருந்து கொழும்பு வரை மரக்கறிகளை கொண்டு வருவதற்கு நானுஓயா ரயில் நிலையத்தை மையப்படுத்தி பொருளாதார மத்திய நிலைய பிரிவொன்று அமைக்கப்படும்” எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்அதேவேளை, நானுஓயா தொடருந்து நிலையத்துக்கு வருகை தந்திருந்த அமைச்சர், நானுஓயா தொடருந்து நிலையத்திலிருந்து எல்லவரை செல்வதற்கு காத்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் நட்பு ரீதியில் கலந்துரையாடினார். தொடருந்து நிலைய அதிகாரிகளையும் சந்தித்துளார்.புதிய தொடருந்து பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரித்துளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *