Connect with us

உள்நாட்டு செய்தி

யாழ்ப்பாணம் வீதி விபத்தில்  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் பலி

Published

on

 யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில்  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று இரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து  பிரிவு உதவிப்  பொலிஸ் அத்தியட்சகரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த குறித்த உதவிப் பொலிஸ்  அத்தியட்சகர் பேருந்துடன் மோதி வீதியில் வீழ்ந்துள்ளார்.இதன்போது முன்னால் வந்த லொறியுடன் மோதி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குருணாகல் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் லொறியின் சாரதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *