Connect with us

உள்நாட்டு செய்தி

யாழ் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்காக நூலகம்

Published

on

யாழ்ப்பாணம் – சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நூலகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும், பராமரிப்பு ஆலோசனைகளையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீ காந்தலக்சுமி மற்றும் சமுகசெயற்பாட்டாளர்களின் பங்களிப்புடன் குறித்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ.உதயகுமார, பிரதான சிறைச்சாலை அதிகாரி எச்.எம்.டி.ஹேரத், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *