Connect with us

உள்நாட்டு செய்தி

டொலரின் ஒரு தொகையை ரூபாவாக மாற்றும் செயற்பாடு இடைநிறுத்தம்

Published

on

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் ஏற்றுமதி வருமானம் பெறுபவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை டொலர்களை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என மத்திய வங்கி விதித்த சட்டத்தை இம்மாதம் முதல் இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து தற்போது பெறப்படும் வருமானத்தின் அளவு காரணமாக ஏற்றுமதி வருமானத்தின் ஒரு பகுதியை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணம், ஏற்றுமதி வருமானம் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் அமெரிக்க டொலர்களின் தொகை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மத்திய வங்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.