உள்நாட்டு செய்தி
பஸ்யாலை – கிரியுல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2023/02/download-2023-02-22T174635.788.jpg)
![FB602AD6-B4CA-48E8-BB55-D1B8D4A4B5C2-1024x576](https://i0.wp.com/malayagam.lk/wp-content/uploads/2023/04/FB602AD6-B4CA-48E8-BB55-D1B8D4A4B5C2-1024x576-1-696x392.jpeg?resize=696%2C392&ssl=1)
பஸ்யாலை – கிரியுல்ல வீதியின் மீரிகம, கலேலிய பிரதேசத்தில் வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியில் ட்ரக் ஒன்று எட்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ட்ரக் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.