Connect with us

உள்நாட்டு செய்தி

ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவது இயலாத விடயம்?

Published

on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

தற்போதைய நிலைமையின் கீழ் தேர்தலை உரிய தினத்தில் நடத்துவது சிக்கலானது என ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் கால எல்லையை கருத்தில்கொள்ளும் போது ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவது ஒருபோதும் இயலாத விடயம் என அவர் கூறினார்.