Connect with us

உள்நாட்டு செய்தி

குழந்தைகள் மத்தியில் வேகமாய் பரவும் இன்புளுவன்சா

Published

on

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா ஏ மற்றும் பி ஆகிய இரண்டு நோய்கள் வேகமாக பரவி வருவதாகத் தெரியவந்துள்ள நிலையில், பிள்ளைகளின் உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.இருமல், காய்ச்சல் அல்லது சளி மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.இந்த நோயுடன் கண்களில் இருந்து நீர் வடியும் நிலைமையு, இருப்பதாக தெரியவந்துள்ளதால், அது குறித்து விரிவான சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *